Friday, July 15, 2016





                   உங்கள் வீட்டில் தொழில்முனைவோர் இருக்கின்றார்களா!!!
                       
                                 அவர்களை முதலில் பாராட்டுங்கள்!!






உங்கள் வீட்டில் தொழில் முனைவோர் உள்ளார்களா அவர்களை முதலில்  பாராட்டுங்கள். ஏன் எனில் உங்களிடமிருந்து அவர்கள் தனித்துவமானவர்கள் 
தினமும் காலை முதல் மாலைவரை உழைத்து உழைத்து களைத்து மீண்டும் அவசரமாக வெந்தும் வேகாத சோற்றை கட்டிக்கொண்டு சென்று அவசரமாக சாப்பிடாமல் மாலையில் கசக்கி வெளியே எறியும் சிறை போன்ற பணியிலிருந்து உழன்று கொண்டிருக்கும் உங்களை விட தனித்துவமானவர்கள் அவர்கள் வாழ்க்கையின் மீது அளவுகடந்த பற்றுள்ளவர்கள் நிகழ்காலத்தில்  தன் குழந்தைகளோடும் குடும்பத்தினரோடும் தன்  நேரங்களை செலவிடும் பாக்கியவான்கள். 

தொழிமுனைவோர் என்பவர் யார்?

ஒரு தொழில்முனைவோர் தன் வெற்றின் இலக்கை தானே முடிவு செய்கிறார் 

அவரின் சிந்தனைகளுக்கு அவரே உயிர் அளிக்கின்றார் 

அவரின் நேரத்தினை அவரே கையாள்கிறார் 

வெற்றி தோல்விகளுக்கு  அவரே பொறுப்பானவர் 

உண்மையில் அவர் முற்றிலும் சுதந்திரமானவர் என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது .
                    
                              தொழில் முனைவோரின் குடும்பத்தினரே!!


தொழில்முனைவோரின்  குடும்பத்தினரே அவர் எப்போதும் தன் இலக்கை நோக்கிய பயணத்தில் கவனமாக இருப்பர்.

ஒரு போதும் அவரை குறைகூறாதீர்கள் அவர் தன்னம்பிக்கையை தகர்க்கும் விதத்தில் மறந்தும் கூட பேசிவிடாதீர்கள். அவர் தொழில் வளர்க்கும் முயற்சியில் சில நேரங்களில் அவரின் வருமானம் கூட தடைபடலாம் எனினும் அவர் தளராது அவர் தொழில் வளர்ச்சிக்கு தேவையான வேளைகளில் தொடர்ந்து ஈடுபட்டிருப்பார் அது போன்ற இக்கட்டான சூழ்நிலைகளில் குடும்பத்தினாராகிய நீங்கள் அவர்களுக்கு தோல் கொடுத்து நல்ல ஆலோசனைகளும் கொடுப்பதே சிறந்தது. இவற்றை செய்யாமல் "நீ தொழில் செய்து கிழித்தது போதும் போய் ஒரு தொழிற்சாலையில் வேலை செய் " என்று இதுபோன்ற தன்னம்பிக்கையை  உடைக்கும் விதத்தில் பேசுவது தவறல்லவா? 
வேலை செய்தே காலத்தை ஓட்டும் குடும்பத்தின் பின்னணியில் இருந்து தொழில்முனைவோராக வருவது எளிதாக  நடந்துவிடுமா   என்ன?

எந்த தொழிலும் ஒரே நாளில் கோடி கோடியாக கொட்டிவிடும் என்ற நினைப்பினை மாற்றுங்கள். குடும்பத்தினரே!

ஒரு மூங்கில் மரம் முளை விடுவதற்கு ஐந்து வருடங்களாகுமாம் அதுவரை ஒரு அறிகுறி கூட இருக்காதாம். அதன் பின் காடாக வளரும் அது போலே தான் தொழிலும்  விதை வளர நேர அவகாசம் தேவை என்பதை தொழில் முனைவோர்களின் பெற்றோர்களும் குடும்பத்தினரும் நண்பர்களும் உணர வேண்டும். உங்களால் தோள்கொடுக்க முடியாவிட்டால் தள்ளி நின்றுவிடுங்கள் இதுவே நீங்கள் அவர்களுக்கு செய்யும் மிகப்பெரும் உதவியாகும்.

நன்றி 

 இது நான் அனுபவத்தில் நடந்ததை உங்களுக்கு பகிர்கிறேன் உங்களுக்கும் இதுபோன்று அனுபவங்கள் கிடைத்திருக்கும். எனினும்  எதிலும் துவண்டு விடாமல் வீறு கொண்டு வெற்றிநடை போடுவோம்!!! 

-தன்னம்பிக்கை வேண்டும் 

























Tuesday, July 12, 2016



        
          குறை சொல்லிக்கொண்டே சிணுங்குவதை விட்டொழியுங்கள் !!!!
                                                                 

அடிப்படை ஒன்றை புரிந்துகொள்ளவேண்டும். நமக்கு தரப்படும் வேலை நம்மை மகிழ்ச்சிப்படுத்த உருவாக்கப்பட்டது அல்ல. நாம் யார் என்பதோ, எதை விரும்புகிறோம் என்பதோ, நம்முடைய தேவைகள் எவை என்பதோ எந்த வேலைக்குமே தெரியாது.

இது வெறும் வேதாந்த தத்துவம் என்று நீங்கள் எண்னிக்கொள்ளலாம். ஆனால் என்னுடைய கருத்துப்படி, ஒரு தொழில் வல்லுனரின் பனிக்காலத்தை இப்படி பார்ப்பது தான் விவேகம். அதில் தான் பயனும் இருக்கும்.என்னை சுற்றிலும் வெற்றியாளர்களை காணும்போது அவர்களின் வெற்றிக்கான காரணம் இப்படிப்பட்ட பார்வைதான் என்று எனக்கு தோன்றுகிறது.

செய்யும் வேலை சிலருக்கு பிடிக்காது. சிலருக்கு சம்பளம் பிடிக்கும் வேலை பிடிக்காது, சிலருக்கு மேலாதிகாரியை பிடிக்காது, சிலருக்கு உடன் வேலைபார்ப்பவரை பிடிக்காது. இன்னும் சிலருக்கு வேலை என்ற எண்ணமே பிடிக்காது. ஆனால் ஒரு தொழில் வல்லுநர், வேலை என்பதை ஒரு கொடை யாகவே பார்க்கிறார். அதிஷ்டவசமாக நமக்கு ஒரு வேலை அமைந்திருக்கிறது. உலகத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் காலையில் கண் விழிக்கும்போதே ,வேலைஇல்லையே என்று வருந்துவது எவ்வளவு வருத்தமானது? 

                உலகத்தில் எந்த கிராமத்துக்கு வேண்டுமானாலும் போய் பாருங்கள். வேலையின்மையின் கொடுமை புரியும். பகுதி நேர வேலையானாலும் அல்லது எப்போதோ கிடைக்கும் வேலையானாலும் அவர்கள் எவ்வளவு நன்றியுடன் ஏற்றுக்கொள்கிறார்கள் என்று புரியும்.

வேலையை வெறுக்கவில்லை ஆனால் திரும்ப திரும்ப ஒரே வேலையை செய்வது தான் ஆயாசம் தருகிறது என்று சிலர் வாதிடுகிறார்கள். விண்ணப்பங்களும் வேலையில் சவாலை தேடுவதாகவே ஆரம்பிக்கின்றன

யோசித்து பாருங்கள் கொஞ்சமும் அயராமல் வண்டுகள் இயங்குவதால் தான் மகரந்த சேர்க்கையும் அதன் மூலம் நமக்கு தானியங்களும் கிடைக்கின்றன. ஆயசமூட்டும் சுழற்சியால் சூரியனும் பூமியும் சும்மா இருந்துவிட்டால் என்ன ஆகும் என்று கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்.
ஒரு வேலையை சிறப்பாக திரும்ப திரும்ப செய்தால் தான்நாம் வாழமுடியும்

உண்மையில் சவால் என்பது, செய்யும் வேலையை உற்சாகம் பெருக்குவதாக மாற்றுவதில் தான் இருக்கிறது.

சில சமயங்களில் பணியிடங்களில் உண்மையான பிரச்சனைகள் இருக்கலாம். நம் ஆற்றலை முழுமையாக பயன்படுத்திக்கொள்ளாதது , முன்னேற்றத்துக்கு தடையாக இருப்பது , அல்லது கொடூரமான மேலதிகாரி அல்லது இணக்கமற்ற சக ஊழியர்கள் போன்ற வடிவங்களை பிரச்சனை இருக்கக்கூடும். பிரச்னையை நேர்கொள்வதுதான் தீர்வுக்கு வழி.

உங்கள் நிறுவனத்திற்கு உள்ளேயோ அல்லது வெளியிலேயோ நல்ல வழிகாட்டி ஒருவருடன் பேசுங்கள்.

பிரச்சனையை ஆழமாக விவாதியுங்கள். அதே சமயம் உங்களுடைய சொந்த விருப்பு வெறுப்புகளால் ஏற்பட்ட பங்கு என்ன என்பதையும் உண்மையாக ஆய்வு செய்யுங்கள், தீர்வு புலப்படும்.நீங்களே சரி செய்ய முடிவு செய்யுங்கள்.

பிரச்சனை நிறுவனம் சார்ந்ததாக இருந்தால் வேறு வேலைக்கு முயற்சி செய்யுங்கள்.ஆனால் வேளையில் எப்ப்போதும் சிணுங்கிக்கொண்டு இருக்காதீர்கள்

நீங்கள் குறை சொல்லிக்கொண்டும் சிணுங்கிக்கொண்டும் இருப்பதால் ஒரு பயனும் இல்லை.

உங்களுடைய வேலையை பற்றி  நீங்கள் ஓயாமல் முனகிகொண்டே இருந்தால் அதை கேட்டுக்கொண்டிருக்கும் ஒரு சாராருக்கு அதில் அக்கறையும் இருக்காதது அவர்களால் உங்களுக்கு உதவியும் செய்ய இயலாது. இன்னொரு சாரார் உங்கள் துன்பத்தில் மகிழ்ச்சி அடையலாம்.


வேறு வேலை தான் தீர்வு என்று முடிவானால், நீங்கள் தற்போது சந்திக்கும் பிரச்சனைகள் புதிய இடத்திலும் இருக்காது என்பதனை உறுதிசெய்து கொள்ளுங்கள்.
சேரப்போகும் வேலையை பற்றி முன்னறிவு இல்லாததால், சிலர் தமக்கு பொருந்தாத வேளையில்  சேர்ந்துவிட்டு,பிறகு அதை சொல்லியே ஆயுள் முழுதும் புலம்புகின்றனர். பிடித்தமான தொழிலுக்கு மாறுவதை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். 

             உங்களுடைய மனப்போக்கை  உணர்ந்துகொண்டு பொருத்தமான வேலை வாய்ப்புகளை அடைய ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன, ஆகவே பொருந்தாத வேளையில் மன உளைச்சலுடன் காலம் முழுதும் வருந்திக்கொண்டிருப்பதைவிட காலம் கடந்து முயற்சி செய்கிறோம் என்றில்லாமல் புதிதாகவே துவங்குவது நல்லது. 

சில நேரங்களில் சாதனைகள் படைத்த நல்ல தொழில் வல்லுனர்களும் செய்துவரும் பணியை தாண்டி வளர்ந்துவிடுகிறார்கள் அதனால் சலிப்பு தோன்றலாம். அந்த நிலை உங்களுக்கு ஏற்பட்டால் அதற்கான அடையாளங்கள் வெளியே இருப்பவர்களுக்கு தெரியாது. 

  எப்படி உங்கள் செருப்பு உங்கள் காலை இருக்கி கடிக்கும்போது அது உங்களுக்கு மட்டும் தான் தெரியுமோ!அதே போல அதேபோல நீங்கள் செய்துவரும் அதிகமாக நீங்கள் வளர்ந்துவிட்டால்.அதுவும் உங்களுக்கு மட்டும் தான் தெரியும்.

நிறுவனத்தில் இன்னும் நீங்கள் எந்தவிதமான அதிக பொறுப்புகளை ஏற்க முடியும் என்று கவனியுங்கள். அதிக பொறுப்பு வேண்டும் என்று கேளுங்கள் 
உங்கள் மேலதிகாரியை அணுகி கேளுங்கள் இடையிடையே உங்களை விட இளைய நிலையில் இருப்பவர்களுக்கு உதவி செய்யுங்கள்.அப்படி செய்யும் உதவி உங்கள் வேலையை சுவாரஸ்யமாக்கும்.
உங்கள் சாதனைகளுக்கு மேலும் மெருகு சேர்க்கும்.

நீங்களும் உங்கள் வாழ்வில்
                                 வெற்றிபெற வாழ்த்துக்கள் -தன்னம்பிக்கை வேண்டும்  
















Sunday, September 22, 2013

வாழ்க்கை என்பது உடை ஒத்திகை பார்ப்பது போல் அல்ல

 

 
                                                           

                                                                    


 நீங்கள் எந்த தத்துவத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் என்பது பற்றி எனக்கு கவலையில்லை - வாழ்க்கை என்கிற ஆட்டத்தில் ஒரே ஒரு வாய்ப்பே நமக்கு இருக்கிறது . எதிர்கால தலைமுறைகளை பந்தய பணமாக வைத்தே இந்த ஆட்டத்தை நாம் ஆடுகிறோம் .

நிலவின் கீழே துயில் கொண்டிருந்தான்
    சூரியனின் கீழே  குளிர் காய்ந்து கொண்டிருந்தான்
             செய்யத்தான் போகிறோம் என்றே வாழ்ந்திருந்தான்  -எதுவும்
                          செய்யாமலே மாய்ந்துவிடான் -JAMES ALLBERY

மேலே  உள்ள கூற்றின்படி அவர் கூறும் செய்தி  என்னவென்றால்

 யோசித்துகொண்டே இருக்காமல் செயலில் இறங்குவதையே குறிக்கிறது
இன்றே உங்களால் செய்ய முடிந்ததை ஒரு போதும் நாளை வரை தள்ளி போடாதீர்கள் - BENJAMIN FRANKLIN 

வெற்றி பெற்றவர்கள் அனைவருமே தம் வேலைகளை  தள்ளிபோட விரும்பி பின்னால் சில காரணங்களால் அவ்வாறு  செய்ய முடியாமல் போனவர்கள்
தான் என்று நான் உறுதியாக கூறுகிறேன்.

தள்ளிபோடுவதை நிறுத்திக்கொள்ளுங்கள். தள்ளிபோடும் பழக்கத்தை தள்ளி தள்ளி வைப்பதற்கு இதுவே சிறந்ததொரு தருணமல்லவா  நண்பர்களே  இனியும் காலம் தாமதிக்காமல் செய்வனவற்றை அன்றே முடித்து வாழ்க்கையில் ஏற்றம் பெற
 -தன்னம்பிக்கை வேண்டும்
வாழ்த்துகிறது




Thursday, August 8, 2013

முடியாது என்று சொல்ல தயங்காதீர்கள்.

   உங்கள் நண்பர்களில் ஒருவர் உங்களிடம் ஒரு உதவி செய்யுமாறு கேட்கிறார் என்று வைத்துகொள்வோம். அதற்கு நீங்கள் உடனே என்ன பதில் சொல்வீர்கள். செய்கிறேன் என்றா? அல்லது முடியாது என்றா ?
    பொதுவாக நாம் அனைவருமே "செய்கிறேன்" என்று தான் சொல்லுவோம்.  அது எவ்வளவு பெரிய தவறு  என்று தெரியுமா ? நம்மால் அவர் கேட்பதை செய்ய முடியுமா,  அவர் கேட்கும் காலத்திற்குள் செய்ய முடியுமா என்பதை கணக்கிடாது எந்த பதிலும் சொல்ல கூடாது.
    "செய்கிறேன்" என்று சொல்லிவிட்டு செய்யாமல் போனால் அதன் பாதிப்பு என்ன என்பது நமக்கு தெரியாத போது முடியாது என்று சொல்வது தான் நீங்கள்  உங்கள் நண்பருக்கு செய்யும் மிகசிறந்த உதவியாகும். உங்களுக்கும் மனம் குழம்பாது இருக்கும்.

Thursday, June 6, 2013

நம்பிக்கையற்றவர்கள் யார் ? யார் ? அவர்களின் அடையாளம் என்ன ?

   

                                      உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் 

கீழ்காணும் இவற்றில் உங்களுக்கு ஏதேனும் பொருந்தும் என்றால்
நீங்கள் அவநம்பிக்கையுடன் இருக்கீர்கள் என்று உண்மை .


1. அவ நம்பிக்கையாளர்கள் புலம்புவதற்கு எதுவாக எந்த பிரச்னையும் இல்லையென்றால் சோகமாகிவிடுவார்கள்.

2. நன்றாக இருக்கும்போதே இந்த மகிழ்ச்சி நிலைக்காமல் போய்விடுமோ  என்று பயந்து கவலைப்பட ஆரம்பித்து விடுவார்கள்.

3. குறைகளை முறையிடும் கவுண்டர்களிலே தங்கள் வாழ்கையின் பெரும் பகுதியை செலவழிப்பார்கள் 

4. எவ்வளவு இருட்டாக இருக்கிறது என்பதை காண்பதற்காக  எப்போதும் விளக்குகளை  அனைத்தே வைத்திருப்பார்கள்.

5. நாளை சுகமில்லாமல் போய்விடுமோ என்று எண்ணுவதால் தங்களது  திடகாத்திரமான உடல் நிலையை கூட அனுபவிக்க முடியாதவர்கள்.

6. மோசமான நிலையை எதிர்பார்ப்பது மட்டுமல்லாமல் எது நடந்தாலும் அதை மோசமாக ஆக்கிவருபவர்கள்.

7. இனிப்பு பணியாரத்தை பார்க்காமல் அதிலுள்ள ஓட்டைகளை மட்டுமே பார்பவர்கள் .

8. தங்களுக்கு கிடைத்திருக்கும் நன்மைகளை ( BLESSINGS ) மறந்துவிட்டு 
தங்களது பிரச்சனைகளையே எண்ணுபவர்கள்.

அடுத்த பதிவில் தன்னம்பிக்கை உடையவர்களின் செயல்பாடுகள் பற்றியும் உங்களை  தன்னம்பிக்கை உடையவர்களாக மாற்றும் சில வழிகளை  பற்றி பார்க்கலாம் நண்பர்களே! 

- தன்னம்பிக்கை வேண்டும் 


Friday, March 22, 2013

தடைகளை தாண்டி வெளியில் வருதல்

தடைகளை  எப்போதுமே எதிர்கொள்ளதவர்களை விட தடைகளை தாண்டி வெளிவந்தோர் மிகவும் பாதுகாப்பான இடத்தில இருக்கிறார்கள். நமக்கு எல்லோருக்கும் பிரச்சனைகள் இருக்கின்றன. நாம் சில சமயம் சோர்வடைந்து விடுகிறோம். பெரும்பாலானவர்கள் ஏமாற்றமடைந்து விடுகின்றனர்.  ஆனால் வெற்றிபெறுபவர்கள் ஒரு போதும் மனச்சோர்வு அடைவதில்லை. விடாமுயற்சி கொள்வதே அதற்கான காரணமாகும். ஓர் ஆரவரமற்ற கடல் ஒரு போதும் திறமை வாய்ந்த மாலுமியை உருவாக்கியதில்லை என்று ஒரு ஆங்கில பழமொழி கூறுகிறது.எதுவுமே சுலபமாக ஆவதற்கு முன்னால் கடினமாகவே இருக்கின்றது.நாம் நமது பிரச்சனைகளில் இருந்து ஓடி விடக்கூடாது. தோல்வியடைபவர்கள் மட்டுமே போராட்டத்திலிருந்து விலகி கொண்டு போராட்டத்தை விட்டு விடுவார்கள்.

ஒரு தற்காலிக பிரச்சனைக்கு ஒரு நிரந்தரமான தீர்வே தற்கொலையாகும்

Tuesday, April 24, 2012

மன அமைதி

      நம்மை சுற்றியிருக்கும் அனைவருக்கும் வாழ்வில் மகிழ்ச்சியொடு இருக்க வேண்டும் என்றும், மன அமைதி இருக்க வேண்டும் என்ற ஆசை  இருக்கும். மன அமைதியை  தொடந்து மகிழ்ச்சி தானக வரும்.

     துன்பங்களையும், தொல்லைகளையும், கவலைகளையும் மறந்து, சிறிது நேரமாவது மகிழ்ச்சியாக இருக்க யார்தான் விரும்பமாட்டார்கள். சரி, மன அமைதி என்பது என்ன? அதை  எப்படி அடைவது. மன அமைதி என்பது, உள் மனதில் உள்ள பாரங்கள் குறைந்தது போலான ஒரு நிலை. எடுத்துகாட்டாக, தொலைகாட்சியில் உன்களுக்கு பிடித்த நிகழ்ச்சியை  காணும் போதும், கடற்கரை  மணலில் அமர்நதிருக்கும் போதும், அல்லது பிடித்த நூல்( புத்தகம்) படிக்கும் போதும் ஏற்படும் உணர்வை போன்றது.

     உடலும், மனமும் எடை குறைந்தன போல தோன்றும். அப்பொழுது நீங்கள், மற்ற கவலைகளை  மறந்துவிட்டு உங்கள் மனதை கவனிக்க வேண்டும். ஆழ்ந்த தூக்கம் அல்லது நல்ல ஓய்வு போன்ற உணர்வு, உங்களை சமநிலையில் வைத்திருக்க அவசியமானது. இல்லையேல் வாழ்கை பொருளற்றது போல தோன்றும். ஆகவே, மன அமைதி மிக முக்கியமானது.

  மன அமைதி பெற சில வழிகள்.
  • மாற்ற முடியாதவற்றை  ஏற்றுகொள்ளுங்கள். அது உங்களின் ஆற்றலை  வெகுவாய் சேமிக்கிறது.
  •  உங்களை  மன உளைச்சளுக்கு உள்ளாக்கும், உரையாடல்களிலிருந்து விலகியிருங்கள்.
  • உணர்ச்சிவயப்படுவதை  குறைத்து கொள்ளுங்கள். மற்றவர்களிடம், உண்ர்வுப்பூர்வமாக பழகுவதை  குறைத்து கொள்ளுங்கள்.
  • மன்னிக்க கற்று கொள்ளுங்கள். அது மன உளைச்சளை  அறவே அழித்துவிடும்.
  • மற்றவரிடம் பொறாமை  கொள்வதை  விட்டுவிடுங்கள்.

      உங்களை விட, வேறு யாரும் உங்கள் வேலையை  செய்ய முடியாது. மனதில் அமைதி, உறங்கும்போது மட்டுமல்ல, கடினமான சூழ்நிலைகளிளும் வேண்டும். அது இருப்பின், எல்லா பிரச்சனைகளை  தீர்த்துவிடலாம்.

Monday, January 9, 2012

தேனீர் அருந்துவதை நிறித்தி கொள்ளுங்கள்

    முடிந்த வரை தேனீர் அருந்துவதை  நிறித்தி கொள்ளுங்கள். அதாவது பால் கலந்த தேனீர். அதனோடு பால் கலந்த மற்ற பொருட்களையும் தவிர்த்து விடுங்கள். அவை உடலில் முதுமை தன்மையை தூண்டும், வளர்க்கும் துகள்களை அதிகமாக்குகின்றன. அது மட்டுமின்றி இளவயதிலேயே சோர்வு அடைய காரணங்களில் இதுவும் ஒன்று. ஒரு குடுவை பால் உங்களை என்ன செய்து விட போகிறது என்று என்னி அருந்தினால், 40 வயதில் தெளிவீர்கள் அப்பொழுதே நிறுத்தியிருக்களாமே என்று. அது பலனற்றது. ஆகவே பால் சார்ந்த பொருட்களை தவிர்த்து விடுங்கள் தோழர்களே..


    Please stop drinking tea, I mean the tea with milk. Dairy products have some benefits at first, that is for young peoples. But as age progresses milk increases oxidants, that is free radicals(chemical term) in our body leading to enhanced aging. As we feel tired, we just postpone our tasks result in delaying subsequent tasks  in out to-do list. Ultimately we end up in failure. You may think what just a cup of milk(or any dairy product) is going to do on our health, but when you are 40 you may think,"I should have avoided drinking tea." No use in it. Be aware of Milk.

Tuesday, December 6, 2011

BORN2WIN-Steps To Make It True

   We are born to win in this world we have lot of oppurtunites  to won in your life. here i am  publish the ideas making for your success in your life follows below.

1. You should have a life plan 
 
        write with your inner voice to follow 
 
2. My day will starting today 
               write your Attitudes 
              1. what is the motive?
              2. what is the Ethic?
              3. what is the value?
              4. what is the judgement?
               5. what is the belief?
3. Listen to your inner voice.
      

     please read your inner voice  do that only .

4. You should have a financial planning:
       
      
















5. TIME MANAGEMENT


 

   Manage your time like, for studying , watching TV, and others.


6. SELF START 
    self start you . today is starting to your life with zero


















7. NEVER EVER DEPEND ON OTHERS



8. LIVE EVERY DAY 



9. LIVE YOUR OWN DEFNITION





(to be continued..)

கருத்துரை