Sunday, September 22, 2013

வாழ்க்கை என்பது உடை ஒத்திகை பார்ப்பது போல் அல்ல

 

 
                                                           

                                                                    


 நீங்கள் எந்த தத்துவத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் என்பது பற்றி எனக்கு கவலையில்லை - வாழ்க்கை என்கிற ஆட்டத்தில் ஒரே ஒரு வாய்ப்பே நமக்கு இருக்கிறது . எதிர்கால தலைமுறைகளை பந்தய பணமாக வைத்தே இந்த ஆட்டத்தை நாம் ஆடுகிறோம் .

நிலவின் கீழே துயில் கொண்டிருந்தான்
    சூரியனின் கீழே  குளிர் காய்ந்து கொண்டிருந்தான்
             செய்யத்தான் போகிறோம் என்றே வாழ்ந்திருந்தான்  -எதுவும்
                          செய்யாமலே மாய்ந்துவிடான் -JAMES ALLBERY

மேலே  உள்ள கூற்றின்படி அவர் கூறும் செய்தி  என்னவென்றால்

 யோசித்துகொண்டே இருக்காமல் செயலில் இறங்குவதையே குறிக்கிறது
இன்றே உங்களால் செய்ய முடிந்ததை ஒரு போதும் நாளை வரை தள்ளி போடாதீர்கள் - BENJAMIN FRANKLIN 

வெற்றி பெற்றவர்கள் அனைவருமே தம் வேலைகளை  தள்ளிபோட விரும்பி பின்னால் சில காரணங்களால் அவ்வாறு  செய்ய முடியாமல் போனவர்கள்
தான் என்று நான் உறுதியாக கூறுகிறேன்.

தள்ளிபோடுவதை நிறுத்திக்கொள்ளுங்கள். தள்ளிபோடும் பழக்கத்தை தள்ளி தள்ளி வைப்பதற்கு இதுவே சிறந்ததொரு தருணமல்லவா  நண்பர்களே  இனியும் காலம் தாமதிக்காமல் செய்வனவற்றை அன்றே முடித்து வாழ்க்கையில் ஏற்றம் பெற
 -தன்னம்பிக்கை வேண்டும்
வாழ்த்துகிறது




Thursday, August 8, 2013

முடியாது என்று சொல்ல தயங்காதீர்கள்.

   உங்கள் நண்பர்களில் ஒருவர் உங்களிடம் ஒரு உதவி செய்யுமாறு கேட்கிறார் என்று வைத்துகொள்வோம். அதற்கு நீங்கள் உடனே என்ன பதில் சொல்வீர்கள். செய்கிறேன் என்றா? அல்லது முடியாது என்றா ?
    பொதுவாக நாம் அனைவருமே "செய்கிறேன்" என்று தான் சொல்லுவோம்.  அது எவ்வளவு பெரிய தவறு  என்று தெரியுமா ? நம்மால் அவர் கேட்பதை செய்ய முடியுமா,  அவர் கேட்கும் காலத்திற்குள் செய்ய முடியுமா என்பதை கணக்கிடாது எந்த பதிலும் சொல்ல கூடாது.
    "செய்கிறேன்" என்று சொல்லிவிட்டு செய்யாமல் போனால் அதன் பாதிப்பு என்ன என்பது நமக்கு தெரியாத போது முடியாது என்று சொல்வது தான் நீங்கள்  உங்கள் நண்பருக்கு செய்யும் மிகசிறந்த உதவியாகும். உங்களுக்கும் மனம் குழம்பாது இருக்கும்.

Thursday, June 6, 2013

நம்பிக்கையற்றவர்கள் யார் ? யார் ? அவர்களின் அடையாளம் என்ன ?

   

                                      உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் 

கீழ்காணும் இவற்றில் உங்களுக்கு ஏதேனும் பொருந்தும் என்றால்
நீங்கள் அவநம்பிக்கையுடன் இருக்கீர்கள் என்று உண்மை .


1. அவ நம்பிக்கையாளர்கள் புலம்புவதற்கு எதுவாக எந்த பிரச்னையும் இல்லையென்றால் சோகமாகிவிடுவார்கள்.

2. நன்றாக இருக்கும்போதே இந்த மகிழ்ச்சி நிலைக்காமல் போய்விடுமோ  என்று பயந்து கவலைப்பட ஆரம்பித்து விடுவார்கள்.

3. குறைகளை முறையிடும் கவுண்டர்களிலே தங்கள் வாழ்கையின் பெரும் பகுதியை செலவழிப்பார்கள் 

4. எவ்வளவு இருட்டாக இருக்கிறது என்பதை காண்பதற்காக  எப்போதும் விளக்குகளை  அனைத்தே வைத்திருப்பார்கள்.

5. நாளை சுகமில்லாமல் போய்விடுமோ என்று எண்ணுவதால் தங்களது  திடகாத்திரமான உடல் நிலையை கூட அனுபவிக்க முடியாதவர்கள்.

6. மோசமான நிலையை எதிர்பார்ப்பது மட்டுமல்லாமல் எது நடந்தாலும் அதை மோசமாக ஆக்கிவருபவர்கள்.

7. இனிப்பு பணியாரத்தை பார்க்காமல் அதிலுள்ள ஓட்டைகளை மட்டுமே பார்பவர்கள் .

8. தங்களுக்கு கிடைத்திருக்கும் நன்மைகளை ( BLESSINGS ) மறந்துவிட்டு 
தங்களது பிரச்சனைகளையே எண்ணுபவர்கள்.

அடுத்த பதிவில் தன்னம்பிக்கை உடையவர்களின் செயல்பாடுகள் பற்றியும் உங்களை  தன்னம்பிக்கை உடையவர்களாக மாற்றும் சில வழிகளை  பற்றி பார்க்கலாம் நண்பர்களே! 

- தன்னம்பிக்கை வேண்டும் 


Friday, March 22, 2013

தடைகளை தாண்டி வெளியில் வருதல்

தடைகளை  எப்போதுமே எதிர்கொள்ளதவர்களை விட தடைகளை தாண்டி வெளிவந்தோர் மிகவும் பாதுகாப்பான இடத்தில இருக்கிறார்கள். நமக்கு எல்லோருக்கும் பிரச்சனைகள் இருக்கின்றன. நாம் சில சமயம் சோர்வடைந்து விடுகிறோம். பெரும்பாலானவர்கள் ஏமாற்றமடைந்து விடுகின்றனர்.  ஆனால் வெற்றிபெறுபவர்கள் ஒரு போதும் மனச்சோர்வு அடைவதில்லை. விடாமுயற்சி கொள்வதே அதற்கான காரணமாகும். ஓர் ஆரவரமற்ற கடல் ஒரு போதும் திறமை வாய்ந்த மாலுமியை உருவாக்கியதில்லை என்று ஒரு ஆங்கில பழமொழி கூறுகிறது.எதுவுமே சுலபமாக ஆவதற்கு முன்னால் கடினமாகவே இருக்கின்றது.நாம் நமது பிரச்சனைகளில் இருந்து ஓடி விடக்கூடாது. தோல்வியடைபவர்கள் மட்டுமே போராட்டத்திலிருந்து விலகி கொண்டு போராட்டத்தை விட்டு விடுவார்கள்.

ஒரு தற்காலிக பிரச்சனைக்கு ஒரு நிரந்தரமான தீர்வே தற்கொலையாகும்

கருத்துரை